கவிதை: வண்டி எப்படி இருக்கு
இரண்டு புதிய ஓட்டுனர்கள்
ஒருவரிடம் Break-க்கும், Gear-ரும்
மற்றவரிடம் Clutch-ச்சும் Acclerator-ரும்
நகர்கிறது
மலை வளைவுகளை நோக்கி !
அந்த நான்கு சக்கர வண்டி !
ஒருவழியாய் முடிந்தது இந்த
கல்யாணம் !
களைந்து போனது
பெருமூச்சு விட்ட
பெருசுகள் !
அது சரி
உங்க வண்டி எப்படி இருக்கு ?
Labels:
கவிதை
கவிதை: நான் புதுசு !
வெலகி போகுது மேகம் !
வெலகி போகுது மேகம் !
இப்ப தெரியுது பாரு வானம் !
ஆனா அங்க என் ஒயிட்டு கலர்
நிலா வத்தான் காணோம் !
வந்துச்சு பாரு கோவம் !
அதனால குடிச்சேன் ஒரு பானம் !
அப்புறம் என்ன
கப்பல் ஏற ஆரம்பிச்சது என் மானம் !
தள்ளாடி நடந்தேன் வீட்டுக்கு, வீதியில !
மப்பு மண்டைக்கு ஏறிடிச்சு பாதி வழியில !
தடுமாறி நடந்தவன தட்டி விட்டது கல்லு !
விழுந்ததுல எகுரீடுச்சு என் பல்லு !
ஒடஞ்சு போச்சு இடுப்புல இருந்த full-லு !
தூக்கிவிட்டான் வெறும்பய ஒருத்தேன் !
அட அது என் ஆளோட பழைய ஆளு, சுரேந்திரன் !
டேய் ரோடு பூரா தண்ணி !
பாத்து போடா பண்ணி !
என்றான் இந்த புதுசுக்கு !
போடா சு______
என்றேன் அந்த பழசுக்கு !
சாரி பாஸ்,
அவன் பழசு இல்ல
பழசுல பழசு !
ஆனா நான் புதுசு
but பழசுல புதுசு !
வாசிப்புக்கு நன்றி.
வெலகி போகுது மேகம் !
இப்ப தெரியுது பாரு வானம் !
ஆனா அங்க என் ஒயிட்டு கலர்
நிலா வத்தான் காணோம் !
வந்துச்சு பாரு கோவம் !
அதனால குடிச்சேன் ஒரு பானம் !
அப்புறம் என்ன
கப்பல் ஏற ஆரம்பிச்சது என் மானம் !
தள்ளாடி நடந்தேன் வீட்டுக்கு, வீதியில !
மப்பு மண்டைக்கு ஏறிடிச்சு பாதி வழியில !
தடுமாறி நடந்தவன தட்டி விட்டது கல்லு !
விழுந்ததுல எகுரீடுச்சு என் பல்லு !
ஒடஞ்சு போச்சு இடுப்புல இருந்த full-லு !
தூக்கிவிட்டான் வெறும்பய ஒருத்தேன் !
அட அது என் ஆளோட பழைய ஆளு, சுரேந்திரன் !
டேய் ரோடு பூரா தண்ணி !
பாத்து போடா பண்ணி !
என்றான் இந்த புதுசுக்கு !
போடா சு______
என்றேன் அந்த பழசுக்கு !
சாரி பாஸ்,
அவன் பழசு இல்ல
பழசுல பழசு !
ஆனா நான் புதுசு
but பழசுல புதுசு !
வாசிப்புக்கு நன்றி.
Labels:
கவிதை
கவிதை மாதிரி : அட எங்கய்யா போனது ?
நீதிமன்றம்,
நீதி தேவதை,
நீதிபதி,
இதுவரை ஆணியே அடித்திராத அவரது சுத்தியல்,
அரைகுறை மூங்கில் கூண்டு,
வழக்குரைஞர்,
விவாகரத்து பத்திரம்,
ஒருபுறம், பலசில கடுப்பில் கணவன்,
மறுபுறம், சிலபல கடுப்பில் மனைவி,
இருபுறமும் இவர்களை உசுப்பேத்திய உறவினர்கள்,
எல்லாம் இருக்க,
நீதிபதியின் பேனா வாலாட்ட
அனைவரின் இறுக்கம் கலைந்தது.
உறவும் உதிர்ந்தது.
இன்று
எங்கே போனது ?
அட எங்கய்யா போனது ?
அன்று சாட்சி
என்று யாருக்கும் அடங்காமல் ஆடிய
அக்னி ?.
நீதி தேவதை,
நீதிபதி,
இதுவரை ஆணியே அடித்திராத அவரது சுத்தியல்,
அரைகுறை மூங்கில் கூண்டு,
வழக்குரைஞர்,
விவாகரத்து பத்திரம்,
ஒருபுறம், பலசில கடுப்பில் கணவன்,
மறுபுறம், சிலபல கடுப்பில் மனைவி,
இருபுறமும் இவர்களை உசுப்பேத்திய உறவினர்கள்,
எல்லாம் இருக்க,
நீதிபதியின் பேனா வாலாட்ட
அனைவரின் இறுக்கம் கலைந்தது.
உறவும் உதிர்ந்தது.
இன்று
எங்கே போனது ?
அட எங்கய்யா போனது ?
அன்று சாட்சி
என்று யாருக்கும் அடங்காமல் ஆடிய
அக்னி ?.
Labels:
கவிதை
கவிதை:மரணம்
யாரோ எங்கோ
காணவில்லை !
எனக்கென என்று
அதை கண்டுகொள்ளவில்லை !
வேலை முடிந்து
வீடு திரும்பியவனுக்கு
வீதி சொல்லியது
புருவத்தை உயர்த்தும்
புள்ளிவிவரங்களும் அவரது
பூர்வீகமும் !
காலை யார் என்று தெரியாதவர் !
மாலை மனதில் நெருங்கிய
நண்பராகிக் கொண்டு இருந்தார்
தேடுதல் வேட்டையின்
நீளம் அதிகரிக்க அதிகரிக்க !
சோகமும் சோம்பலும் சூழ்ந்தது
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தது தொலைக்காட்சிப்பெட்டி !
இப்படியே கடந்தது நேரம் !
இரவு இறந்து
விடியல் பிறந்தது !
தொலைக்காட்சிப்பெட்டி
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தாலும் அதை
விட்டு விலக
மறுக்கிறது மனம் !
தாமதமாய் அலுவலகம்
கிளம்பும் முன்
கிடைத்தது தகவல்
கிடைத்துவிட்டது அவரது
வாகனம் என்று !
உடலின் உயிர்களை பற்றி
உண்மைகள் சொல்வதற்குள்
விரைந்தேன் அலுவலகத்திற்கு !
பார்ப்பவர்கள் அனைவரின்
கலங்கத் தயாராக இருக்கும்
கண்களும் !
உடைந்த குரல்களும், சொன்னது, அந்த
பெரியமனிதர் இவர்களுக்கும்
நண்பர் ஆனா கதையை !
ஒருபுறம் வந்தவண்ணமாய்
தொலைபேசியின் அலறல்கள் !
மறுபுறம் கூட்டம் கூட்டமாய்
நண்பர்கள் !
அவர்களது உதடுகள் முனுமுனுக்கிறது
அவரது சரித்திரத்தை !
இப்படியே கடந்தது
காலை வேலை !
வந்து சேர்ந்தது
அனைவரும்
அரைகுறையாய் எதிர்பார்த்த
அந்த செய்தி !
எங்களின்
நெருங்கிய
நண்பர்
விடைபெற்றார்
என்று !
அனைவரின் உடல்
அசைவுகளையும் அடக்கியது
சோகம் !
சிறிது நேரம்
கடந்தது இப்படியே !
பிறகு
மின்னலாய் வந்தது
மற்றொரு செய்தி !
இன்றும் நாளையும்
விடுமுறை என்று !
அனைவரின்
கண்ணில் தெரிந்த சோகம்
மறந்து போனது !
மீண்டும் மலர்ந்தது
முன்னுக்குப் பின்னான
முப்பத்திரெண்டு பற்களும் !
காணவில்லை !
எனக்கென என்று
அதை கண்டுகொள்ளவில்லை !
வேலை முடிந்து
வீடு திரும்பியவனுக்கு
வீதி சொல்லியது
புருவத்தை உயர்த்தும்
புள்ளிவிவரங்களும் அவரது
பூர்வீகமும் !
காலை யார் என்று தெரியாதவர் !
மாலை மனதில் நெருங்கிய
நண்பராகிக் கொண்டு இருந்தார்
தேடுதல் வேட்டையின்
நீளம் அதிகரிக்க அதிகரிக்க !
சோகமும் சோம்பலும் சூழ்ந்தது
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தது தொலைக்காட்சிப்பெட்டி !
இப்படியே கடந்தது நேரம் !
இரவு இறந்து
விடியல் பிறந்தது !
தொலைக்காட்சிப்பெட்டி
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தாலும் அதை
விட்டு விலக
மறுக்கிறது மனம் !
தாமதமாய் அலுவலகம்
கிளம்பும் முன்
கிடைத்தது தகவல்
கிடைத்துவிட்டது அவரது
வாகனம் என்று !
உடலின் உயிர்களை பற்றி
உண்மைகள் சொல்வதற்குள்
விரைந்தேன் அலுவலகத்திற்கு !
பார்ப்பவர்கள் அனைவரின்
கலங்கத் தயாராக இருக்கும்
கண்களும் !
உடைந்த குரல்களும், சொன்னது, அந்த
பெரியமனிதர் இவர்களுக்கும்
நண்பர் ஆனா கதையை !
ஒருபுறம் வந்தவண்ணமாய்
தொலைபேசியின் அலறல்கள் !
மறுபுறம் கூட்டம் கூட்டமாய்
நண்பர்கள் !
அவர்களது உதடுகள் முனுமுனுக்கிறது
அவரது சரித்திரத்தை !
இப்படியே கடந்தது
காலை வேலை !
வந்து சேர்ந்தது
அனைவரும்
அரைகுறையாய் எதிர்பார்த்த
அந்த செய்தி !
எங்களின்
நெருங்கிய
நண்பர்
விடைபெற்றார்
என்று !
அனைவரின் உடல்
அசைவுகளையும் அடக்கியது
சோகம் !
சிறிது நேரம்
கடந்தது இப்படியே !
பிறகு
மின்னலாய் வந்தது
மற்றொரு செய்தி !
இன்றும் நாளையும்
விடுமுறை என்று !
அனைவரின்
கண்ணில் தெரிந்த சோகம்
மறந்து போனது !
மீண்டும் மலர்ந்தது
முன்னுக்குப் பின்னான
முப்பத்திரெண்டு பற்களும் !
Labels:
கவிதை
ஹைக்கூ: மன்னிப்பு
1.
உறவை புதுப்பிக்க
விடுக்கப்படும் விண்ணப்பம்,
2.
முடிந்த வரை கேட்காமல் இருப்பது
கேட்டால் உடனே கொடுப்பது
3.
கசப்பும் இனிப்பும் கலந்த
ஒற்றை வார்த்தை
4.
நெஞ்சின் ஈரத்தை அளந்து காட்டும்
அளவுகோல்
உறவை புதுப்பிக்க
விடுக்கப்படும் விண்ணப்பம்,
2.
முடிந்த வரை கேட்காமல் இருப்பது
கேட்டால் உடனே கொடுப்பது
3.
கசப்பும் இனிப்பும் கலந்த
ஒற்றை வார்த்தை
4.
நெஞ்சின் ஈரத்தை அளந்து காட்டும்
அளவுகோல்
Labels:
ஹைக்கூ
ஹைக்கூ : உலக அழகி
ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் பண்ணலாம்,
அதில் முதல் பொய் இது தான்
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !
அதில் முதல் பொய் இது தான்
" நான் பார்த்ததிலே நீ தான் அழகி " என்பது !
Labels:
ஹைக்கூ
கவிதை:நான்
orkut - About me sectionனுக்காக எழுதியது.
விடிந்தும்
விழிக்காதவன் !
விழித்தாலும்
பல்விலக்காதவன் !
பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !
குளித்தாலும்
சாப்பிடாதவன் !
இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !
பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !
சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !
பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !
சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !
ஆங்கிலம்
அதிகம்
பேச விரும்பாதவன்,
தமிழுக்கு
தலை வணங்குபவன் !
முதல் சம்பளமாய்
ஐந்து ரூபாய் வாங்கியவன் !
அதை என்னை சுமந்தவளிடம்
கொடுத்து, அவளின் பாராட்டு
மழையில் நனைந்தவன் !
சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !
பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !
வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !
பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !
கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !
தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !
காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !
தமிழில் பிழைகளோடு
சில வரிகளை கிறுக்கி,
அதன் முடிவில்
ஆச்சிரியக்குறி போட்டுவிட்டு !
நானும் கவிஞன் என்று
ஊருக்குள் திரிபவன் !
கரூரில் கருப்பாய்
கருவறையில் இருந்து
பூத்தவன் !
ஈரோட்டில்
நெஞ்சில்
ஈரத்தோடு மிகவும் வளர்ந்தவன்!
பிளைப்புக்காக ஹைதராபாத்தில்
தஞ்சம் அடைந்தவன் !
முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !
பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?
விடிந்தும்
விழிக்காதவன் !
விழித்தாலும்
பல்விலக்காதவன் !
பல்விலக்கினாலும்
குளிக்காதவன் !
குளித்தாலும்
சாப்பிடாதவன் !
இப்படி பல பொய்களை
அவ்வப்போது சொல்பவன் !
பல பெண்களை தூரத்தில்
இருந்து ரசிப்பவன் !
சிலர் அருகில் இருந்தால்
மூச்சு தினருபவன் !
பெருமை,
பொறாமை,
கோபம்,
புகழ்,
பதவி,
இவைகள் இல்லாமல்
அமைதியாய்
வாழ நினைப்பவன் !
சில நேரங்களில்
இவைகளால்
அமைதி இல்லாமல்
ஆறுதல் தேடுபவன் !
ஆங்கிலம்
அதிகம்
பேச விரும்பாதவன்,
தமிழுக்கு
தலை வணங்குபவன் !
முதல் சம்பளமாய்
ஐந்து ரூபாய் வாங்கியவன் !
அதை என்னை சுமந்தவளிடம்
கொடுத்து, அவளின் பாராட்டு
மழையில் நனைந்தவன் !
சொந்த பந்தங்களை
விரும்புபவன் !
அவர்களின் மனக்கணக்கு
புரியாமல் கலங்குபவன் !
பாடல்களை பாடத் தெரியாதவன்,
ஆனால் அதை எப்போதும்
கேட்டுக்கொண்டே இருப்பவன் !
வாழ்க்கையில்
எப்பொழுதும்
எதையாவது
தேடிக்கொண்டே இருக்க வேண்டும்
என்று ஆசை !
ஆனால் தொலைத்ததை
தேட மறுப்பவன் !
பணத்தை பத்தோடு பதினொன்றாய்
கருதுபவன் !
குணத்தை பத்தில் ஒன்றாய்
போற்றுபவன் !
கணக்கு போட்டு செலவு செய்ய
விரும்பாதவன் !
அப்படி செய்பவர்களை
நெஞ்சில் வஞ்சிக்கொண்டு
பல்லை இழிதுக்கொண்டு
பாராட்டுபவன் !
தற்பெருமையை சொல்ல
விரும்பாதவன் !
சுயமரியாதைக்காக சொல்லிய பின்
என்னை கண்டிப்பவன் !
காகிதத்தில் வரையத் தெரியாதவன் !
கணிப்பொறியில்
வண்ணம்
தீட்டுபவன் !
தமிழில் பிழைகளோடு
சில வரிகளை கிறுக்கி,
அதன் முடிவில்
ஆச்சிரியக்குறி போட்டுவிட்டு !
நானும் கவிஞன் என்று
ஊருக்குள் திரிபவன் !
கரூரில் கருப்பாய்
கருவறையில் இருந்து
பூத்தவன் !
ஈரோட்டில்
நெஞ்சில்
ஈரத்தோடு மிகவும் வளர்ந்தவன்!
பிளைப்புக்காக ஹைதராபாத்தில்
தஞ்சம் அடைந்தவன் !
முக்கியமாக என்னவளுக்காக
என்றிருந்தோ காத்திருப்பவன் !
என்றும் காத்திருப்பவன் !
பலருக்கு நண்பன்,
சிலருக்கு நெருங்கிய நண்பன்,
உங்களுக்கு ?
Labels:
கவிதை
கவிதை:மேகம்
அரைமணிநேரம் ஊர் எல்லைகள்
வரை தண்ணீர் பாய்ச்சியதில்
வற்றிப்போனது !
உரல் தண்ணீரை பார்த்து
உறைந்துபோன உழவனின்
உளறல் கேட்டும் !
காற்றோடு
கரைந்து போனது !
வானத்தில் தொங்கிய
ஆழமில்லாத கேணி !
வரை தண்ணீர் பாய்ச்சியதில்
வற்றிப்போனது !
உரல் தண்ணீரை பார்த்து
உறைந்துபோன உழவனின்
உளறல் கேட்டும் !
காற்றோடு
கரைந்து போனது !
வானத்தில் தொங்கிய
ஆழமில்லாத கேணி !
கவிதை : மச்சி நீ பிசுருடா !
மது மயக்கத்தில்
பாதி !
மாதுவின்
மடியில்
மீதி !
விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !
நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !
நினைத்ததை
இன்றே முடித்துவிடு !
நாளை உன்னுடயதாக்கி
விடு !
மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !
வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.
எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.
பாதி !
மாதுவின்
மடியில்
மீதி !
விழித்திருப்பது
உனது வழிகள்
மட்டும் !
நல்வினை செய்ய
இதுவே
தக்கத்தருணம் !
நினைத்ததை
இன்றே முடித்துவிடு !
நாளை உன்னுடயதாக்கி
விடு !
மூச்சுள்ளவரை இதை
தொடர்ந்திடு !
வாழும்போதே
உலகம்
உன் பெயர்
சொல்லட்டும் !.
எழுத்துப்பிழை திருத்தியதற்கும்
வார்த்தைகளை சீரமைத்ததிற்கும்
என் நண்பன் அருண் அவர்களுக்கு மிக்க நன்றி !.
Labels:
கவிதை
கவிதை:சுவாசம் குடித்ததடி!
உன்
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!
அனால் உயிர்
இழக்கவில்லை!
பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !
ஓரக்கண் பார்வை
ஒற்றை நிமிடம்
என் சுவாசம்
குடித்ததடி!
அனால் உயிர்
இழக்கவில்லை!
பிறகு தெரிந்தது
அந்த நிமிடம்
என்னுல் ஓடியது
நான் குடித்த
உன் சுவாசம் என்று !
கவிதை: நம்மவள் கல்யாணி
இயந்திரம் போல்
இயங்கிக்கொண்டே
இருக்கிறது
இந்த
வாழ்க்கை!
எப்போதாவது பசிக்கிறது
அப்போதுதான் உணர்கிறேன்
மனிதன் என்று!
இதற்கும் இடையில்
இதயப் பறவையை
தூது அனுப்புகிறேன்
சேதியை சேர்ப்பதற்குள்
பறவை படுகொலை
செய்யப்படுகிறது!
கொலையாளிக்கு பரிசு என்னவள்
எனக்கோ கல்யாணி!.
இயங்கிக்கொண்டே
இருக்கிறது
இந்த
வாழ்க்கை!
எப்போதாவது பசிக்கிறது
அப்போதுதான் உணர்கிறேன்
மனிதன் என்று!
இதற்கும் இடையில்
இதயப் பறவையை
தூது அனுப்புகிறேன்
சேதியை சேர்ப்பதற்குள்
பறவை படுகொலை
செய்யப்படுகிறது!
கொலையாளிக்கு பரிசு என்னவள்
எனக்கோ கல்யாணி!.
Labels:
கவிதை
கவிதை : பச்சை புறா ??????????
திண்ணையில்
அழகாய்
ஒரு பச்சை
புறா!
பச்சை புறா ??????????
காண அரிதென்று
நினைத்து
படம்
பிடிப்பதற்குள்
பறந்துவிட்டது!...
புண் முறுவல் இட்டு
என் தலை தட்டினேன்!
புறாவை பறக்கவிட்டதர்க்காக
இல்லை
என் முகத்தில்
பச்சைக் கண்ணாடி
என்பதனால்!....
அழகாய்
ஒரு பச்சை
புறா!
பச்சை புறா ??????????
காண அரிதென்று
நினைத்து
படம்
பிடிப்பதற்குள்
பறந்துவிட்டது!...
புண் முறுவல் இட்டு
என் தலை தட்டினேன்!
புறாவை பறக்கவிட்டதர்க்காக
இல்லை
என் முகத்தில்
பச்சைக் கண்ணாடி
என்பதனால்!....
Labels:
கவிதை
கவிதை: மதி இழக்கிறேனா ?
தன் உறுப்பை கூட காண
முடியாமல் சிலர்.....
நானோ
கண் சுழட்டுகிறேன்
அங்கும் இங்குமாய்
அலையும் அங்கம்
கண்டு மகிழ!
தன் பெயரை கூட
கேட்க்க முடியாமல் சிலர்....
நானோ
புலம்புகிறேன்
என் புகழை
ஏன் பாடவில்லை
என்று!
வாய் இருந்தும் குரல்
எழுப்ப முடியாமல் சிலர்.....
நானோ
வாய்க்கு வந்தபடி
வாதாடினேன்
என் பேச்சை
ஏன் கேட்க்கவில்லை
என்று!
மதி இழக்கிறேனா ?
இல்லை
இது தான்
விதியா ?
விதி என்றால்
என்
மதி இந்த
விதியை வெல்லுமா ?...
முடியாமல் சிலர்.....
நானோ
கண் சுழட்டுகிறேன்
அங்கும் இங்குமாய்
அலையும் அங்கம்
கண்டு மகிழ!
தன் பெயரை கூட
கேட்க்க முடியாமல் சிலர்....
நானோ
புலம்புகிறேன்
என் புகழை
ஏன் பாடவில்லை
என்று!
வாய் இருந்தும் குரல்
எழுப்ப முடியாமல் சிலர்.....
நானோ
வாய்க்கு வந்தபடி
வாதாடினேன்
என் பேச்சை
ஏன் கேட்க்கவில்லை
என்று!
மதி இழக்கிறேனா ?
இல்லை
இது தான்
விதியா ?
விதி என்றால்
என்
மதி இந்த
விதியை வெல்லுமா ?...
Labels:
கவிதை
கவிதை: ஆண்கள் ரசிக்கும் கவிதை...
ஆண்கள்
அனைவரும்
அவ்வப்போது
ரசிக்கும்
மிகவும் அழகான
ஒரு வரிக் கவிதை!
அதில்,
தன் பெயருக்கு முன்னால்
தன்னவளின் பெயர் கோர்க்கப்பட்டிருக்கும்!..
அனைவரும்
அவ்வப்போது
ரசிக்கும்
மிகவும் அழகான
ஒரு வரிக் கவிதை!
அதில்,
தன் பெயருக்கு முன்னால்
தன்னவளின் பெயர் கோர்க்கப்பட்டிருக்கும்!..
Labels:
கவிதை
கவிதை:காதலும் காமமும்
காதலும் காமமும்,
பூவா தலையா போல
ஒரு சமயத்தில், ஒன்று மட்டுமே சாயும்!.....
உண்மையா ?
பூவா தலையா போல
ஒரு சமயத்தில், ஒன்று மட்டுமே சாயும்!.....
உண்மையா ?
Labels:
கவிதை
கவிதை: அமைதியின் இலக்கணம்
சிரித்தால் !, என்னைப்போல் வாய் விட்டுச் சிரி
அழுதால் !, என்னைப்போல் கடைசி சொட்டு கண்ணீர் வரை அழு
என்று
சொல்லால் சொல்லாமல்
செயலில் சொல்லிவிட்டு,
அன்பாய் அமர்ந்திருக்கிறது
அமைதியின் இலக்கணம்,
தன் அம்மாவின் மடியில்!..
அழுதால் !, என்னைப்போல் கடைசி சொட்டு கண்ணீர் வரை அழு
என்று
சொல்லால் சொல்லாமல்
செயலில் சொல்லிவிட்டு,
அன்பாய் அமர்ந்திருக்கிறது
அமைதியின் இலக்கணம்,
தன் அம்மாவின் மடியில்!..
Labels:
கவிதை
கவிதை:வாதம் வந்து விட்டதடி
உன்னை பற்றி
பக்கம் பக்கமாய்
எழுதவேண்டும்
என்று
ஆசையோடு
அமர்ந்தேன்,
ஆனால் அதற்குள்
உன்னை வர்ணிக்க
வழிதேடி வந்த
வார்த்தைகளுக்குள்
வாதம் வந்து
விட்டதடி
யார் முதல் என்று!
நான் என்ன செய்ய!.
பக்கம் பக்கமாய்
எழுதவேண்டும்
என்று
ஆசையோடு
அமர்ந்தேன்,
ஆனால் அதற்குள்
உன்னை வர்ணிக்க
வழிதேடி வந்த
வார்த்தைகளுக்குள்
வாதம் வந்து
விட்டதடி
யார் முதல் என்று!
நான் என்ன செய்ய!.
கவிதை: நடிக்கிறோம்
சந்தோஷத்தில் துக்கமாய்,
துக்கத்தில் சந்தோஷமாய்,
நடிக்கிறோம்,
முதல் வரி மற்றவர்களை
புண்படுத்தாமல்
இருக்க !
இரெண்டாவது வரி நம்மை
காயப்படுத்தாமல்
இருக்க !
துக்கத்தில் சந்தோஷமாய்,
நடிக்கிறோம்,
முதல் வரி மற்றவர்களை
புண்படுத்தாமல்
இருக்க !
இரெண்டாவது வரி நம்மை
காயப்படுத்தாமல்
இருக்க !
Labels:
கவிதை
கவிதை 19: இழப்பை ஏற்படுத்தியது
நான் எறிந்த கல் என்னை காயப்படுத்தியது,
காயம் ஆறும் முன்னே இழப்பை ஏற்படுத்தியது,
இந்தக் கோபம்!..
காயம் ஆறும் முன்னே இழப்பை ஏற்படுத்தியது,
இந்தக் கோபம்!..
கவிதை 18:பதிலுக்காக காத்திருக்கிறேன்
வாழ வைக்கும் விஞ்ஞானத்தை
மூடர்களுக்கு புரிந்த
மூடநம்பிக்கையில்
விளக்கினாய்,
தோற்றவனுடைய கோபத்தை
களிமண் போல்
கரைத்தாய்,
உன் மேல் போட்டிக்காக எறிந்ததை
குதிக்க வைத்து
குதிக்க வைத்து
குதூகலப் படுத்தினாய்,
விண்ணில் இருந்து
வாழ வந்தவர்களை
ஆரவாரமிட்டு
அடைக்கலம் தந்தாய்
நீ இல்லை என்றால் ஊரே
கண் கலங்குகிறது,
உன் வருகை
வீதி எங்கும்
விழா கோலமாகிறது,
உன்னை போல் வாழ
அறிவுரை செய்யமாட்டயா ?
என்று கேள்வியை
கேட்டு
விட்டு,
பதிலுக்காக காத்திருக்கிறேன்,
குளத்தங்கரையில்....
Labels:
கவிதை
கவிதை 17: எதிர் வாசல்
விடியலை விட்டு விலகி
எழுந்தேன் அன்று,
வெளியே கூச்சல் கேட்டு
விரைந்தேன் வாசலுக்கு,
எதிர் வாசலில் வந்தவண்ணமாய்
உறவினர்கள்,
வீதி முழுவதும் விதவிதமாய்
விவாதங்கள்,
என்னவென்று கேட்பதற்கு என்
வீட்டிலோ யாரும் இல்லை,
தூரத்தில் தெரிந்த நண்பன்
நெருங்கி வந்து
கட்டியணைத்து
தோள் தட்டியபடி,
"டேய் மச்சி நம்ப ஆளு வயசுக்கு
வந்துட்டா டா "
என்றான் வெட்கத்துடன் !..
எழுந்தேன் அன்று,
வெளியே கூச்சல் கேட்டு
விரைந்தேன் வாசலுக்கு,
எதிர் வாசலில் வந்தவண்ணமாய்
உறவினர்கள்,
வீதி முழுவதும் விதவிதமாய்
விவாதங்கள்,
என்னவென்று கேட்பதற்கு என்
வீட்டிலோ யாரும் இல்லை,
தூரத்தில் தெரிந்த நண்பன்
நெருங்கி வந்து
கட்டியணைத்து
தோள் தட்டியபடி,
"டேய் மச்சி நம்ப ஆளு வயசுக்கு
வந்துட்டா டா "
என்றான் வெட்கத்துடன் !..
Labels:
கவிதை
கவிதை 16: காதல் தோல்வி
தொடங்கிய கவிதை
ஒன்று
வார்த்தை
இல்லாமல் நின்றது !,
எழுதிய பாடல்
ஒன்று இசை
இல்லாமல்
வெறும் எழுத்தானது !,
பலிக்காமல் போனது
கனவொன்று !,
கையில் கிடைக்கும்
முன்னே
கரைந்து விட்டது
ஒரு பனிக்கட்டி !,
கூட்டமாய் காய்ந்தது
கொத்தாக வாங்கிய
மலர்கள் !.
நேற்று வரை
ஈர்ப்பு விசையை
பொய்யாக்கி
காற்றாய் பறந்த
இடங்களில்
இன்று காலனி கூட
பாரமாக தெறிகிறது !,
உன் பார்வையில்
தொடங்கிய
என் வாழ்க்கை,
முடிந்துவிட்டது
உன் வார்த்தையில்!.......................
.........................................
இப்படி காலங்காலமாய் கவிதை
எழுதியவர்கள்
தான் எத்தனை பேர் !...
இறைவா இன்னுமா ஆண்களின் குரல்
கேட்க்கவில்லை உனக்கு !...
ஆண் நெஞ்சை புரிந்து கொள்வதற்கு
பெண் அறிவை மாற்றி எழுதக்கூடாதா ?....
:)
ஒன்று
வார்த்தை
இல்லாமல் நின்றது !,
எழுதிய பாடல்
ஒன்று இசை
இல்லாமல்
வெறும் எழுத்தானது !,
பலிக்காமல் போனது
கனவொன்று !,
கையில் கிடைக்கும்
முன்னே
கரைந்து விட்டது
ஒரு பனிக்கட்டி !,
கூட்டமாய் காய்ந்தது
கொத்தாக வாங்கிய
மலர்கள் !.
நேற்று வரை
ஈர்ப்பு விசையை
பொய்யாக்கி
காற்றாய் பறந்த
இடங்களில்
இன்று காலனி கூட
பாரமாக தெறிகிறது !,
உன் பார்வையில்
தொடங்கிய
என் வாழ்க்கை,
முடிந்துவிட்டது
உன் வார்த்தையில்!.......................
.........................................
இப்படி காலங்காலமாய் கவிதை
எழுதியவர்கள்
தான் எத்தனை பேர் !...
இறைவா இன்னுமா ஆண்களின் குரல்
கேட்க்கவில்லை உனக்கு !...
ஆண் நெஞ்சை புரிந்து கொள்வதற்கு
பெண் அறிவை மாற்றி எழுதக்கூடாதா ?....
:)
Labels:
கவிதை
கவிதை 15: அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்
பர்சை பரிகுடுக்க தயாராகும் அளவிற்கு
அழகாய் இருக்கிறாய்,
உன் அழகை மெருகூட்ட
வண்ண வண்ணமாய்
சின்ன சின்னதாய்
சிலபேர் உன்னை சுற்றி!,
உன் மெல்லிய கன்னத்தை கில்ல
யாருக்குத்தான் ஆசை வராது,
ஏழை ஆனாலும் பணக்காரன் ஆனாலும்
பாரபச்சம் இன்றி பழகுகிறாய்,
நீ இல்லாமல் ஏங்குவோர் சிலர்,
உனக்காக காத்திருப்போர் பலர்,
அதில் நானும் ஒருவன்,
அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்,
உன்னை எனக்கு கொடுத்ததற்கு..
இப்பொழுது நீ என் மடியில்,
உன்னை மெதுவாய் அனுபவிக்க துடிக்கிறது என் உறுப்பு ஒன்று,
காலம் கடத்த வேண்டாம் வா!...
ம்ம்ம்ம்ம்ம்ம்.................
என்ன ருசி!
என்ன ருசி!
நாவில் தேன் வார்க்கிறது
இந்த இதமான இட்லி,
தேங்காய் சட்னியுடன்!....
அழகாய் இருக்கிறாய்,
உன் அழகை மெருகூட்ட
வண்ண வண்ணமாய்
சின்ன சின்னதாய்
சிலபேர் உன்னை சுற்றி!,
உன் மெல்லிய கன்னத்தை கில்ல
யாருக்குத்தான் ஆசை வராது,
ஏழை ஆனாலும் பணக்காரன் ஆனாலும்
பாரபச்சம் இன்றி பழகுகிறாய்,
நீ இல்லாமல் ஏங்குவோர் சிலர்,
உனக்காக காத்திருப்போர் பலர்,
அதில் நானும் ஒருவன்,
அம்மாவிற்குத்தான் எத்தனை சந்தோஷம்,
உன்னை எனக்கு கொடுத்ததற்கு..
இப்பொழுது நீ என் மடியில்,
உன்னை மெதுவாய் அனுபவிக்க துடிக்கிறது என் உறுப்பு ஒன்று,
காலம் கடத்த வேண்டாம் வா!...
ம்ம்ம்ம்ம்ம்ம்.................
என்ன ருசி!
என்ன ருசி!
நாவில் தேன் வார்க்கிறது
இந்த இதமான இட்லி,
தேங்காய் சட்னியுடன்!....
Labels:
கவிதை
கவிதை:14 - வாழ்கையின் எடுத்துக்காட்டுகள்
எதிரிகள் இல்லாத எல்லை,
குடித்து விட்டு கூச்சலிடாத குடிகாரன்,
தன் உடலை ஒளிபரப்பாத பெண்,
மாடி வீடு இல்லாத முதலாளி,
பிச்சை பாத்திரம் ஏந்தாத பிளாட்பாரம்,
உதிரம் உறிஞ்ஜாத உயிர்,
எதையும் எதிர் பாக்காத நட்பு,
ஊடல் இல்லாத உடன் பிறந்தோர்,
விளம்பரப் படுத்திக்கொல்லாத மனிதன்,
மாணவனுக்காக காத்திருக்கும் ஆசிரியர்,
வஞ்சம் இல்லாமல் பாராட்டுபவன்,
படுத்தவுடன் உறங்குபவன்..........................
இவை அனைத்தும் பள்ளியறையில்
ஆழமாய் போதிக்கப்பட
வேண்டிய எடுத்துக்காட்டுகளே!
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
குடித்து விட்டு கூச்சலிடாத குடிகாரன்,
தன் உடலை ஒளிபரப்பாத பெண்,
மாடி வீடு இல்லாத முதலாளி,
பிச்சை பாத்திரம் ஏந்தாத பிளாட்பாரம்,
உதிரம் உறிஞ்ஜாத உயிர்,
எதையும் எதிர் பாக்காத நட்பு,
ஊடல் இல்லாத உடன் பிறந்தோர்,
விளம்பரப் படுத்திக்கொல்லாத மனிதன்,
மாணவனுக்காக காத்திருக்கும் ஆசிரியர்,
வஞ்சம் இல்லாமல் பாராட்டுபவன்,
படுத்தவுடன் உறங்குபவன்..........................
இவை அனைத்தும் பள்ளியறையில்
ஆழமாய் போதிக்கப்பட
வேண்டிய எடுத்துக்காட்டுகளே!
நீங்கள் என்ன சொல்கிறீர்கள் ?
Labels:
எடுத்துக்காட்டுகள்,
கவிதை
கவிதை:13 - நட்பின் பரிசு
தனிமையில் தழுவிய வாடைக் காற்று,
முதல் பிறந்தநாள் வாழ்த்து அட்டை,
எதிர் பாராத வந்த கோடை மலை,
எதிர் பாரத நேரத்தில் வந்த விரும்பிய விருந்தாளி,
இவைகள் தந்த
மன நிரைவும்,
புன்னகையும்,
பெருமிதமும் தான்,
எதிர் பாராமல் வந்த உன் நட்பும்,
எதிர் பார்ப்பே இல்லாத உன் அன்பும்,
எனக்கு பரிசாக அளித்தது.........
முதல் பிறந்தநாள் வாழ்த்து அட்டை,
எதிர் பாராத வந்த கோடை மலை,
எதிர் பாரத நேரத்தில் வந்த விரும்பிய விருந்தாளி,
இவைகள் தந்த
மன நிரைவும்,
புன்னகையும்,
பெருமிதமும் தான்,
எதிர் பாராமல் வந்த உன் நட்பும்,
எதிர் பார்ப்பே இல்லாத உன் அன்பும்,
எனக்கு பரிசாக அளித்தது.........
Labels:
கவிதை
கவிதை - 12
உன் ஒவ்வொரு அசைவுக்காக காத்திருந்தேன்,
நீ சொல்வதை எல்லாம் கேட்டேன்,
நில் என்றாய், மௌனமாய் நின்றேன்,
வா என்றாய், கண் இமைக்கும் நேரத்தில் வந்தேன்,
போ என்றாய், உன் கண்ணில் படாமல் இருந்தேன்.
இன்றோ உன் ஆசைகளை பூர்த்திசெய்ய முடியாமல்
நோய் வாய் பட்டு கிடக்கிறேன்....
இன்றாவது என்னை கவனிக்க மாட்டாயா ?
என்று அந்த இளைஞனிடம்
குமறியது அவன் செயல் இழந்த நின்ற கணிப்பொறி!....
நீ சொல்வதை எல்லாம் கேட்டேன்,
நில் என்றாய், மௌனமாய் நின்றேன்,
வா என்றாய், கண் இமைக்கும் நேரத்தில் வந்தேன்,
போ என்றாய், உன் கண்ணில் படாமல் இருந்தேன்.
இன்றோ உன் ஆசைகளை பூர்த்திசெய்ய முடியாமல்
நோய் வாய் பட்டு கிடக்கிறேன்....
இன்றாவது என்னை கவனிக்க மாட்டாயா ?
என்று அந்த இளைஞனிடம்
குமறியது அவன் செயல் இழந்த நின்ற கணிப்பொறி!....
Labels:
கவிதை
ஹைக்கூ - 1
நான் சிரித்தால் நீ மகிழ்கிறாய்,
நான் கண் கலங்கினால் நீ மனம் உடைந்து விடுகிறாய்,
என் மேல் உனக்கு அவ்வளவு பிரியமா ?
என்று என்னை கேட்கிறது முகக்கண்ணாடி
குளியல் அறையில் !....
நான் கண் கலங்கினால் நீ மனம் உடைந்து விடுகிறாய்,
என் மேல் உனக்கு அவ்வளவு பிரியமா ?
என்று என்னை கேட்கிறது முகக்கண்ணாடி
குளியல் அறையில் !....
Labels:
ஹைக்கூ
கேள்விகளை கேட்க்க
அவள் சந்தேகத்தை தீர்பதர்க்காக தான் பேசினேன்,
இன்னைக்கு கண்டிப்பாக சீக்கிரம் வந்திடுவேன்,
காலைக்கு தோசை செஞ்சிறு,
சரி உன் நண்பன் கல்யாணத்துக்கு இரெண்டு பேரும் போலாம்,
இந்த வாரம் சனிக்கிழம உங்க அம்மா வீட்டுக்கு போலாம்,
உன் சமையல் சூப்பர் சாம்பார்ல தான் கொஞ்சம் உப்பு பத்தல,
சரி குளிக்கறேன் கத்தாதே,
இப்படி சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் பதில்கள்
கேட்பதற்கு தான் நீ இங்கு இல்லை....
எப்போது வரப்போகிறாய் கேள்விகளை கேட்க்க......
இன்னைக்கு கண்டிப்பாக சீக்கிரம் வந்திடுவேன்,
காலைக்கு தோசை செஞ்சிறு,
சரி உன் நண்பன் கல்யாணத்துக்கு இரெண்டு பேரும் போலாம்,
இந்த வாரம் சனிக்கிழம உங்க அம்மா வீட்டுக்கு போலாம்,
உன் சமையல் சூப்பர் சாம்பார்ல தான் கொஞ்சம் உப்பு பத்தல,
சரி குளிக்கறேன் கத்தாதே,
இப்படி சொல்வதற்கு என்னிடம் ஆயிரம் பதில்கள்
கேட்பதற்கு தான் நீ இங்கு இல்லை....
எப்போது வரப்போகிறாய் கேள்விகளை கேட்க்க......
காத்திருக்கிறோம்
மண்ணில் விதை மழைக்காக காத்திருப்பது போல்,
மேஜையில் காகிதம் பேணாவிற்க்காக காத்திருப்பது போல்,
கைதி விடுதலைக்காக காத்திருப்பது போல்,
பட்டதாரி வேலைக்காக.........
கூலி சுமைக்காக...........
மாணவன் தேர்வு முடிவுக்காக.........
நாடு நல்ல தலைவனுக்காக............
திருடன் இருளுக்காக.............
தோல்வி வெற்றிக்காக............
புகழ் பதவிக்காக.............
குழந்தை பாலுக்காக............
என் தாய் எனக்காக காத்திருப்பது போல்,
உலகம் உனக்காக காத்திருக்கிறது
உறுதியாய் எதிலும் இறங்கு
வென்று விடலாம் யாவரையும்........
மேஜையில் காகிதம் பேணாவிற்க்காக காத்திருப்பது போல்,
கைதி விடுதலைக்காக காத்திருப்பது போல்,
பட்டதாரி வேலைக்காக.........
கூலி சுமைக்காக...........
மாணவன் தேர்வு முடிவுக்காக.........
நாடு நல்ல தலைவனுக்காக............
திருடன் இருளுக்காக.............
தோல்வி வெற்றிக்காக............
புகழ் பதவிக்காக.............
குழந்தை பாலுக்காக............
என் தாய் எனக்காக காத்திருப்பது போல்,
உலகம் உனக்காக காத்திருக்கிறது
உறுதியாய் எதிலும் இறங்கு
வென்று விடலாம் யாவரையும்........
எல்லாம் ஒன்று தான்
வள்ளுவன் வடித்தித்த திருக்குறள்,
கம்பன் கவி பாடிய ராமாயணம்,
பிகாசா வரைந்த ஓவியம்
பில் கேட்ஸ் எழுதிய Windows,
நீ எழுதிய கவிதைகள்,
நான் எழுதிய உன் பெயர்,
எல்லாம் ஒன்று தான்,
என்னை பொருத்த வரையில்!..
கம்பன் கவி பாடிய ராமாயணம்,
பிகாசா வரைந்த ஓவியம்
பில் கேட்ஸ் எழுதிய Windows,
நீ எழுதிய கவிதைகள்,
நான் எழுதிய உன் பெயர்,
எல்லாம் ஒன்று தான்,
என்னை பொருத்த வரையில்!..
நாம் வந்த பாதை
காலை சாலையில் கண்டோம்,
மாலை வீதியில் கைகுலுக்கினோம்,
ஒன்றாய் பயணித்தோம்,
பாடத்தை பிரித்துக்கொண்டோம்,
உணவை மாற்றிக்கொண்டோம்,
என் எதிரிகளை நீ வெறுத்தாய்,
உன் எதிரிகளை நான் வெறுத்தேன்,
காதல் இல்லை நட்பென்று ஊரை ஏமாற்றினோம்,
நம்மையும் ஏமாற்றிக்கொண்டோம்,
துன்பத்தில் தோள்கொடுத்தோம்,
விடுமுறையை வெறுத்தோம்,
இரவானால் நிலவுடன் பேசினோம்,
அதற்க்கு கை அசைத்தோம்,
பின்பு முகம் காண்பாதற்கு
விண்ணில் விடியலை தேடினோம்,
இன்று நம் கல்லுரி இறுதியாண்டு சுற்றுலா
மலை உச்சியில் நிற்கிறோம்,
என் பெயரை உரக்கச் சொன்னாய்
நான் உன் பெயரை சொல்லி முடித்தேன்,
அடுத்தது என்னவென்று ஏங்குகிறாயா ?.
வா நம் உதடுகள் நான்கும் ஒன்றாய்
சத்தம் இல்லாமல் பேசட்டும்!.....
மாலை வீதியில் கைகுலுக்கினோம்,
ஒன்றாய் பயணித்தோம்,
பாடத்தை பிரித்துக்கொண்டோம்,
உணவை மாற்றிக்கொண்டோம்,
என் எதிரிகளை நீ வெறுத்தாய்,
உன் எதிரிகளை நான் வெறுத்தேன்,
காதல் இல்லை நட்பென்று ஊரை ஏமாற்றினோம்,
நம்மையும் ஏமாற்றிக்கொண்டோம்,
துன்பத்தில் தோள்கொடுத்தோம்,
விடுமுறையை வெறுத்தோம்,
இரவானால் நிலவுடன் பேசினோம்,
அதற்க்கு கை அசைத்தோம்,
பின்பு முகம் காண்பாதற்கு
விண்ணில் விடியலை தேடினோம்,
இன்று நம் கல்லுரி இறுதியாண்டு சுற்றுலா
மலை உச்சியில் நிற்கிறோம்,
என் பெயரை உரக்கச் சொன்னாய்
நான் உன் பெயரை சொல்லி முடித்தேன்,
அடுத்தது என்னவென்று ஏங்குகிறாயா ?.
வா நம் உதடுகள் நான்கும் ஒன்றாய்
சத்தம் இல்லாமல் பேசட்டும்!.....
சிறிய மொக்கை ....
விடிந்து மூன்று மணிநேரம் ஆயிற்று! ,
சூரியன் சுட்டெறிக்க தொடங்கிற்று!,
போர்வை இழுத்து போர்த்தி உறங்கிக்கொண்டு இருக்கிறான்
சோம்பேறி!,
என்று நினைக்கிறாயா ?..,
இமை திறந்தால் கனவு கலைந்துவிடும்...
உன்னை விட்டு பிரிய மணமில்லை கனவிலும் கூட..
அதனால் தான் என் இரவை நீட்டிதுக்கொண்டிருக்கேறேன் போர்வை போர்த்தி்..
சூரியன் சுட்டெறிக்க தொடங்கிற்று!,
போர்வை இழுத்து போர்த்தி உறங்கிக்கொண்டு இருக்கிறான்
சோம்பேறி!,
என்று நினைக்கிறாயா ?..,
இமை திறந்தால் கனவு கலைந்துவிடும்...
உன்னை விட்டு பிரிய மணமில்லை கனவிலும் கூட..
அதனால் தான் என் இரவை நீட்டிதுக்கொண்டிருக்கேறேன் போர்வை போர்த்தி்..
குழம்புகிறேன்
வீரம் என்பது பெண்மையின் அடையாளம்
வெட்க்கம் என்பது ஆண்மையின் அடையாளம்
இல்ல இல்ல இல்லல
வீரம் என்பது ஆண்மையின் அடையாளம்
வெட்க்கம் என்பது பெண்மையின் அடையாளம்
இப்படித்தான் குழம்புகிறேன் உன்னை பார்த்ததில் இருந்து!..
வெட்க்கம் என்பது ஆண்மையின் அடையாளம்
இல்ல இல்ல இல்லல
வீரம் என்பது ஆண்மையின் அடையாளம்
வெட்க்கம் என்பது பெண்மையின் அடையாளம்
இப்படித்தான் குழம்புகிறேன் உன்னை பார்த்ததில் இருந்து!..
எனக்கு ஆயிரம் வேலைகள்
உன்னை பற்றி எழுதுவதற்கு ஒன்றுமில்லை,
மன்னித்துவிடு, எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது,
அவை அனைத்தும் உன்னை பற்றி நினைப்பதே!
மன்னித்துவிடு, எனக்கு ஆயிரம் வேலைகள் இருக்கிறது,
அவை அனைத்தும் உன்னை பற்றி நினைப்பதே!
சொல்வதை நம்பியதில்லை..
என்னை பற்றி மூன்றாவது மனிதன் சொல்வதை நம்பியதில்லை..
ஆனால் இன்று நம்பாமல் இருக்க முடியவில்லை...
நான் உன்னை காதலிக்கிறேனாம்!..
ஆனால் இன்று நம்பாமல் இருக்க முடியவில்லை...
நான் உன்னை காதலிக்கிறேனாம்!..
பத்தோடு பதினொன்றாக
என் கரையை கண்டுகொள்ளாமல்
உன் கரை நோக்கி நகர்கிறது என் கால்கள்!,
எழுதிய code-ஐ அழித்து விட்டு
உன்னை பற்றி கவிதை எழுதுகிறது என் விரல்கள்!,
நான் சொல்ல வந்த வார்த்தையை உதறிவிட்டு
உன் பெயரை முனுமுனுக்கிறது என் உதடுகள்!
விரும்பிய பாடலை நிறுத்திவிட்டு
உன் குரலை ஒலிக்கிறது என் காதுகள்!
மல்லிகை பூவை முகர்ந்தால்
உன் வாசனை துளைக்கிறது என் மூக்கை!
இவை அனைத்தும் உன்னை காதலிக்க
என் மனம் மட்டும் என்ன விதிவிளக்கா ?
பத்தோடு பதினொன்றாக அதுவும் உன்னை நேசிக்கிறது!...
உன் கரை நோக்கி நகர்கிறது என் கால்கள்!,
எழுதிய code-ஐ அழித்து விட்டு
உன்னை பற்றி கவிதை எழுதுகிறது என் விரல்கள்!,
நான் சொல்ல வந்த வார்த்தையை உதறிவிட்டு
உன் பெயரை முனுமுனுக்கிறது என் உதடுகள்!
விரும்பிய பாடலை நிறுத்திவிட்டு
உன் குரலை ஒலிக்கிறது என் காதுகள்!
மல்லிகை பூவை முகர்ந்தால்
உன் வாசனை துளைக்கிறது என் மூக்கை!
இவை அனைத்தும் உன்னை காதலிக்க
என் மனம் மட்டும் என்ன விதிவிளக்கா ?
பத்தோடு பதினொன்றாக அதுவும் உன்னை நேசிக்கிறது!...
உன் வருகை
வருகை பதிவில் உன் பெயரை பச்சை குத்தியது போல் பதிவு செய்தாய்,
ரசித்தேன்!,
சிந்தித்தேன்!,
சிலிர்த்தேன்!,
சிரித்தேன்!,
அந்த வருகை பதிவு நானாக இருந்திருந்தால்...
ரசித்தேன்!,
சிந்தித்தேன்!,
சிலிர்த்தேன்!,
சிரித்தேன்!,
அந்த வருகை பதிவு நானாக இருந்திருந்தால்...
உன் விழியன் ஒளியில் ஒரு ....
உன் விழியன் மொழி புரியவில்லை
புரிந்தாலும் பேசப்போவதில்லை
பேசினாலும் காதலிக்கப்போவதில்லை,
காதலித்தாலும் மனக்கபோவதில்லை,
இருந்தாலும் உன் விழியன் ஒளியில் ஒரு மயக்கம்..
புரிந்தாலும் பேசப்போவதில்லை
பேசினாலும் காதலிக்கப்போவதில்லை,
காதலித்தாலும் மனக்கபோவதில்லை,
இருந்தாலும் உன் விழியன் ஒளியில் ஒரு மயக்கம்..
Subscribe to:
Posts (Atom)