கவிதை: ஆண்கள் ரசிக்கும் கவிதை...

ஆண்கள்
அனைவரும்
அவ்வப்போது
ரசிக்கும்
மிகவும் அழகான
ஒரு வரிக் கவிதை!

அதில்,

தன் பெயருக்கு முன்னால்
தன்னவளின் பெயர் கோர்க்கப்பட்டிருக்கும்!..

கவிதை:காதலும் காமமும்

காதலும் காமமும்,
பூவா தலையா போல
ஒரு சமயத்தில், ஒன்று மட்டுமே சாயும்!.....
உண்மையா ?

கவிதை: அமைதியின் இலக்கணம்

சிரித்தால் !, என்னைப்போல் வாய் விட்டுச் சிரி
அழுதால் !, என்னைப்போல் கடைசி சொட்டு கண்ணீர் வரை அழு

என்று

சொல்லால் சொல்லாமல்
செயலில் சொல்லிவிட்டு,

அன்பாய் அமர்ந்திருக்கிறது
அமைதியின் இலக்கணம்,

தன் அம்மாவின் மடியில்!..

கவிதை:வாதம் வந்து விட்டதடி

உன்னை பற்றி
பக்கம் பக்கமாய்
எழுதவேண்டும்
என்று
ஆசையோடு
அமர்ந்தேன்,

ஆனால் அதற்குள்
உன்னை வர்ணிக்க
வழிதேடி வந்த
வார்த்தைகளுக்குள்
வாதம் வந்து
விட்டதடி

யார் முதல் என்று!

நான் என்ன செய்ய!.

கவிதை: நடிக்கிறோம்

சந்தோஷத்தில் துக்கமாய்,
துக்கத்தில் சந்தோஷமாய்,

நடிக்கிறோம்,

முதல் வரி மற்றவர்களை
புண்படுத்தாமல்
இருக்க !

இரெண்டாவது வரி நம்மை
காயப்படுத்தாமல்
இருக்க !

கவிதை 19: இழப்பை ஏற்படுத்தியது

நான் எறிந்த கல் என்னை காயப்படுத்தியது,
காயம் ஆறும் முன்னே இழப்பை ஏற்படுத்தியது,
இந்தக் கோபம்!..

கவிதை 18:பதிலுக்காக காத்திருக்கிறேன்



வாழ வைக்கும் விஞ்ஞானத்தை
மூடர்களுக்கு புரிந்த
மூடநம்பிக்கையில்
விளக்கினாய்,

தோற்றவனுடைய கோபத்தை
களிமண் போல்
கரைத்தாய்,

உன் மேல் போட்டிக்காக எறிந்ததை
குதிக்க வைத்து
குதிக்க வைத்து
குதூகலப் படுத்தினாய்,

விண்ணில் இருந்து
வாழ வந்தவர்களை
ஆரவாரமிட்டு
அடைக்கலம் தந்தாய்

நீ இல்லை என்றால் ஊரே
கண் கலங்குகிறது,

உன் வருகை
வீதி எங்கும்
விழா கோலமாகிறது,

உன்னை போல் வாழ
அறிவுரை செய்யமாட்டயா ?

என்று கேள்வியை
கேட்டு
விட்டு,

பதிலுக்காக காத்திருக்கிறேன்,

குளத்தங்கரையில்....