கவிதை 16: காதல் தோல்வி

தொடங்கிய கவிதை
ஒன்று
வார்த்தை
இல்லாமல் நின்றது !,

எழுதிய பாடல்
ஒன்று இசை
இல்லாமல்
வெறும் எழுத்தானது !,

பலிக்காமல் போனது
கனவொன்று !,

கையில் கிடைக்கும்
முன்னே
கரைந்து விட்டது
ஒரு பனிக்கட்டி !,

கூட்டமாய் காய்ந்தது
கொத்தாக வாங்கிய
மலர்கள் !.

நேற்று வரை
ஈர்ப்பு விசையை
பொய்யாக்கி
காற்றாய் பறந்த
இடங்களில்
இன்று காலனி கூட
பாரமாக தெறிகிறது !,

உன் பார்வையில்
தொடங்கிய
என் வாழ்க்கை,

முடிந்துவிட்டது
உன் வார்த்தையில்!.......................
.........................................


இப்படி காலங்காலமாய் கவிதை
எழுதியவர்கள்
தான் எத்தனை பேர் !...

இறைவா இன்னுமா ஆண்களின் குரல்
கேட்க்கவில்லை உனக்கு !...

ஆண் நெஞ்சை புரிந்து கொள்வதற்கு
பெண் அறிவை மாற்றி எழுதக்கூடாதா ?....

:)

3 comments:

  1. வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி கவின்

    ReplyDelete
  2. girls r having mind...mostly guys r cheaters....

    ReplyDelete