பத்தோடு பதினொன்றாக

என் கரையை கண்டுகொள்ளாமல்
உன் கரை நோக்கி நகர்கிறது என் கால்கள்!,
எழுதிய code-ஐ அழித்து விட்டு
உன்னை பற்றி கவிதை எழுதுகிறது என் விரல்கள்!,
நான் சொல்ல வந்த வார்த்தையை உதறிவிட்டு
உன் பெயரை முனுமுனுக்கிறது என் உதடுகள்!
விரும்பிய பாடலை நிறுத்திவிட்டு
உன் குரலை ஒலிக்கிறது என் காதுகள்!
மல்லிகை பூவை முகர்ந்தால்
உன் வாசனை துளைக்கிறது என் மூக்கை!
இவை அனைத்தும் உன்னை காதலிக்க
என் மனம் மட்டும் என்ன விதிவிளக்கா ?
பத்தோடு பதினொன்றாக அதுவும் உன்னை நேசிக்கிறது!...

No comments:

Post a Comment