நாம் வந்த பாதை

காலை சாலையில் கண்டோம்,
மாலை வீதியில் கைகுலுக்கினோம்,
ஒன்றாய் பயணித்தோம்,
பாடத்தை பிரித்துக்கொண்டோம்,
உணவை மாற்றிக்கொண்டோம்,
என் எதிரிகளை நீ வெறுத்தாய்,
உன் எதிரிகளை நான் வெறுத்தேன்,
காதல் இல்லை நட்பென்று ஊரை ஏமாற்றினோம்,
நம்மையும் ஏமாற்றிக்கொண்டோம்,
துன்பத்தில் தோள்கொடுத்தோம்,
விடுமுறையை வெறுத்தோம்,
இரவானால் நிலவுடன் பேசினோம்,
அதற்க்கு கை அசைத்தோம்,
பின்பு முகம் காண்பாதற்கு
விண்ணில் விடியலை தேடினோம்,

இன்று நம் கல்லுரி இறுதியாண்டு சுற்றுலா
மலை உச்சியில் நிற்கிறோம்,

என் பெயரை உரக்கச் சொன்னாய்
நான் உன் பெயரை சொல்லி முடித்தேன்,

அடுத்தது என்னவென்று ஏங்குகிறாயா ?.

வா நம் உதடுகள் நான்கும் ஒன்றாய்
சத்தம் இல்லாமல் பேசட்டும்!.....

No comments:

Post a Comment