கவிதை:மரணம்

யாரோ எங்கோ
காணவில்லை !

எனக்கென என்று
அதை கண்டுகொள்ளவில்லை !

வேலை முடிந்து
வீடு திரும்பியவனுக்கு
வீதி சொல்லியது
புருவத்தை உயர்த்தும்
புள்ளிவிவரங்களும் அவரது
பூர்வீகமும் !

காலை யார் என்று தெரியாதவர் !
மாலை மனதில் நெருங்கிய
நண்பராகிக் கொண்டு இருந்தார்
தேடுதல் வேட்டையின்
நீளம் அதிகரிக்க அதிகரிக்க !

சோகமும் சோம்பலும் சூழ்ந்தது
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தது தொலைக்காட்சிப்பெட்டி !

இப்படியே கடந்தது நேரம் !
இரவு இறந்து
விடியல் பிறந்தது !

தொலைக்காட்சிப்பெட்டி
சொன்னதையே சொல்லிக்கொண்டு
இருந்தாலும் அதை
விட்டு விலக
மறுக்கிறது மனம் !

தாமதமாய் அலுவலகம்
கிளம்பும் முன்
கிடைத்தது தகவல்
கிடைத்துவிட்டது அவரது
வாகனம் என்று !

உடலின் உயிர்களை பற்றி
உண்மைகள் சொல்வதற்குள்
விரைந்தேன் அலுவலகத்திற்கு !

பார்ப்பவர்கள் அனைவரின்
கலங்கத் தயாராக இருக்கும்
கண்களும் !
உடைந்த குரல்களும், சொன்னது, அந்த
பெரியமனிதர் இவர்களுக்கும்
நண்பர் ஆனா கதையை !

ஒருபுறம் வந்தவண்ணமாய்
தொலைபேசியின் அலறல்கள் !
மறுபுறம் கூட்டம் கூட்டமாய்
நண்பர்கள் !

அவர்களது உதடுகள் முனுமுனுக்கிறது
அவரது சரித்திரத்தை !

இப்படியே கடந்தது
காலை வேலை !

வந்து சேர்ந்தது
அனைவரும்
அரைகுறையாய் எதிர்பார்த்த
அந்த செய்தி !

எங்களின்
நெருங்கிய
நண்பர்
விடைபெற்றார்
என்று !

அனைவரின் உடல்
அசைவுகளையும் அடக்கியது
சோகம் !

சிறிது நேரம்
கடந்தது இப்படியே !

பிறகு

மின்னலாய் வந்தது
மற்றொரு செய்தி !

இன்றும் நாளையும்
விடுமுறை என்று !

அனைவரின்
கண்ணில் தெரிந்த சோகம்
மறந்து போனது !

மீண்டும் மலர்ந்தது
முன்னுக்குப் பின்னான
முப்பத்திரெண்டு பற்களும் !

1 comment:

  1. புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
    தமிழ் வலைப்பூகள் / தளங்களின் சங்கமம் உலவு.காம்
    www.ulavu.com
    (ஓட்டுபட்டை வசதிஉடன் )
    உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….

    இவண்
    உலவு.காம்

    ReplyDelete