கவிதை மாதிரி : அட எங்கய்யா போனது ?

நீதிமன்றம்,
நீதி தேவதை,
நீதிபதி,

இதுவரை ஆணியே அடித்திராத அவரது சுத்தியல்,
அரைகுறை மூங்கில் கூண்டு,
வழக்குரைஞர்,
விவாகரத்து பத்திரம்,

ஒருபுறம், பலசில கடுப்பில் கணவன்,
மறுபுறம், சிலபல கடுப்பில் மனைவி,
இருபுறமும் இவர்களை உசுப்பேத்திய உறவினர்கள்,

எல்லாம் இருக்க,
நீதிபதியின் பேனா வாலாட்ட
அனைவரின் இறுக்கம் கலைந்தது.
உறவும் உதிர்ந்தது.

இன்று
எங்கே போனது ?
அட எங்கய்யா போனது ?
அன்று சாட்சி
என்று யாருக்கும் அடங்காமல் ஆடிய
அக்னி ?.

No comments:

Post a Comment