கவிதை: மதி இழக்கிறேனா ?

தன் உறுப்பை கூட காண
முடியாமல் சிலர்.....

நானோ
கண் சுழட்டுகிறேன்

அங்கும் இங்குமாய்
அலையும் அங்கம்
கண்டு மகிழ!


தன் பெயரை கூட
கேட்க்க முடியாமல் சிலர்....

நானோ
புலம்புகிறேன்

என் புகழை
ஏன் பாடவில்லை
என்று!


வாய் இருந்தும் குரல்
எழுப்ப முடியாமல் சிலர்.....

நானோ
வாய்க்கு வந்தபடி
வாதாடினேன்

என் பேச்சை
ஏன் கேட்க்கவில்லை
என்று!


மதி இழக்கிறேனா ?
இல்லை
இது தான்
விதியா ?

விதி என்றால்

என்
மதி இந்த
விதியை வெல்லுமா ?...

2 comments:

  1. nalla irukku innam azhuththam koduththirukklaam

    ReplyDelete
  2. நன்றி பாலா, இந்த கேள்விக்கு ஒரு அழுத்தமான பதில் என்னிடம் இல்லை,
    அதனால் தான் கவிதையிலும் அழுத்தம் இல்லை என்று நான் நினைக்கிறேன்

    ReplyDelete