கவிதை: அமைதியின் இலக்கணம்

சிரித்தால் !, என்னைப்போல் வாய் விட்டுச் சிரி
அழுதால் !, என்னைப்போல் கடைசி சொட்டு கண்ணீர் வரை அழு

என்று

சொல்லால் சொல்லாமல்
செயலில் சொல்லிவிட்டு,

அன்பாய் அமர்ந்திருக்கிறது
அமைதியின் இலக்கணம்,

தன் அம்மாவின் மடியில்!..

No comments:

Post a Comment