கவிதை: நம்மவள் கல்யாணி

இயந்திரம் போல்
இயங்கிக்கொண்டே
இருக்கிறது
இந்த
வாழ்க்கை!

எப்போதாவது பசிக்கிறது
அப்போதுதான் உணர்கிறேன்
மனிதன் என்று!

இதற்கும் இடையில்
இதயப் பறவையை
தூது அனுப்புகிறேன்

சேதியை சேர்ப்பதற்குள்
பறவை படுகொலை
செய்யப்படுகிறது!

கொலையாளிக்கு பரிசு என்னவள்
எனக்கோ கல்யாணி!.

No comments:

Post a Comment