கவிதை: வேலை வாய்ப்பு

தன் தனிமையையும் தொலைத்து
தவறாமல் தண்ணீர் ஊற்றியவன்,
தான் அறுவடை செய்தது,
தன் தாகம்
தணிக்குமா
என்று,
சந்தையில்
ஏக்கத்தோடு
காத்திருக்கிறான்
தந்தை என்ற ஒரு விவசாயி !