விடியலை விட்டு விலகி
எழுந்தேன் அன்று,
வெளியே கூச்சல் கேட்டு
விரைந்தேன் வாசலுக்கு,
எதிர் வாசலில் வந்தவண்ணமாய்
உறவினர்கள்,
வீதி முழுவதும் விதவிதமாய்
விவாதங்கள்,
என்னவென்று கேட்பதற்கு என்
வீட்டிலோ யாரும் இல்லை,
தூரத்தில் தெரிந்த நண்பன்
நெருங்கி வந்து
கட்டியணைத்து
தோள் தட்டியபடி,
"டேய் மச்சி நம்ப ஆளு வயசுக்கு
வந்துட்டா டா "
என்றான் வெட்கத்துடன் !..
:)))))))))))))))
ReplyDeleteஎன்ன திகழ் இவ்வளோ பெரிய சிரிப்பு...
ReplyDeleteவெட்கமா ?