கவிதைகள் - சிந்தித்தவைகளில் சில

- மனிதாபிமானம்
சாலை ஓரம் அம்மணமாய் ஒரு பைத்தியக்காரன்
அவன் மானம் காப்பாற்றப்படுகிறது
அவனைக் கடக்கும் கண்கள் மூடுவதால் !

- மரியாதை
முத்தம்மிட்டுக் கொண்டிருந்தவர்கள்
விலகிக் கொண்டார்கள்
என்னைக் கண்டதும்.............
என்னைக் கடந்ததும் மீண்டும்
முத்தமிட ஒட்டிக் கொள்கிறார்கள்
வானமும் பூமியும் !

No comments:

Post a Comment